Skip to main content

மனசாட்சி

ஏன் மனதை சாட்சிக்கு 
அழைக்க வேண்டும்....

சொல்வதெல்லாம் உண்மை
என்று
வாக்கு அளித்து விட்டு
மெய் மட்டுமா பேசுகிறோம்.....

முதலீடு வருவதை எண்ணி
முக்கியமானதை மறைக்கிறோமா....

நாம் அடைந்த துன்பத்தை 
பிறர்
அடைய கூடாது என்று நினைக்கிறோமா....

ஊழல் பெருகிட
ஊன் தின்னிட
இரத்தம் உறிஞ்சிட
இங்கே ஒரு கூட்டம்

வலுவாய் மாட்டிய வேலையாட்கள்

திறமையோடு போரிட 
முடியாத கயவன்
அதிகாரத்தோடும்....அகந்தையோடும்
ஆடுகிறான் ...சூதாட்டம்...

தர்மம் வெல்லும் 
என்று கேட்டிருப்போம்....(அதும்)
புயலுக்கே பின்னே....

அதிசய பிறவி மனிதன் 
என்று பெருமை பேசிட
இங்கே யார் மனிதத்தோடு
இருக்கிறோம்.......

வாய்ப்புக்காக காத்திருப்போர்
பலர்....
அதை திருட நினைக்கிற  சிலர்

இப்படியே சென்றால்
இதற்க்கு முற்றுப்புள்ளி......

சிந்தனையுடன்
உங்கள் 
கிராமத்து குரல்.......
 

Comments

Popular posts from this blog

பிறை நிலா

தாய்த்தமிழ்

கம்பன் கையில் பிறந்த தமிழே பாரதியின் எழுத்தில் எழுந்த சுடரே பண்பையும், பகுத்தறிவையும் ஊட்டுகின்ற மொழியே அனைவரின் இரத்த நாளங்களில் ஊறிய தமிழே தனித்து பிறந்த மொழியாம் சிறந்தே  விளங்கும் மொழியாம் மூத்த மொழியாம் மூன்று சங்கம் கண்ட மொழியாம் மூவேந்தரை வளர்த்த மொழியாம்... தித்திப்பாய் இருக்கும்   மொழியாம் திகட்டாத மொழியாம் கலைகளையும்  பண்பாட்டையும் உருவாக்கிய மொழியாம் ஈடு இணையில்லா இறையை கூறும் மொழியாம் தத்துவ   மெய்பொருளை உள்ளடக்கிய மொழியாம் அயல்நாட்டவரை  அரவணைக்கும் மொழியாம் தன்னகரில்லா தரணி மொழியாம்......வாழ்க வாழவே..... உங்கள், கிராமத்து குரல்

உண்மைகள்

        உண்மைகள் ஒரு போதும்    சாவதில்லை......    ஊலாவிக்கொண்டே இருக்கிறது....    தக்க சமயம் பார்த்து    தர்மம் வெல்லும்.....    அகந்தைகள் கொண்ட மனம்    அழிவை நோக்கி செல்லும்....    பண்பை கொண்ட மனம்    அன்பை நோக்கி செல்லும்....