வீரத்தமிழன் மூன்று சங்கம் அமைத்து முத்தமிழை முத்தாய் வடித்தவன் அசராத கட்டிடக்கலைக் கலையை கற்றவன் வீரத்திறக்கு பேர் போனவன் பகைமையோடு இருப்பவரை பகடையாடுபவன் ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று உரைத்த புலவன் கொண்ட தமிழினம் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து பேசும் விவேகம் உடையவன் தாயையும் தமிழையும் சுவாசிப்பவன் நம்பினோரை காப்பாற்றுபவன் தன்னுயிரை விடுத்து தமிழ்க் கொடி ஏந்துபவன் தமிழன் என்று மார்பு தட்டி சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியில் தனிப்பெயர் பெற்றிடு தரணித்தமிழ் போற்ற வாழ்ந்திடு தமிழ் விதை விதைத்திடு விருட்சமாய் விளைந்திடு தமிழினம் காத்திடு தன்மானத்தோடு வாழ்ந்திடு விவசாயம் காத்திடு வீறு கொண்டு எழுந்திடு அடக்குமுறை எழுந்தால் திறம்பட சிந்தித்திடு பார் போற்ற வாழ்ந்திடு வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் தமிழா தன்னகரில்லா தனித்திறமையை வெளிக்கொண்டிடு அகிலத்தில் பெயர் வெட்டிடு........ கிராமத்து குரல்