வண்ணங்களின் அழகு எதில்
உள்ளது...
ஓவியர்களின் வண்ணம்
தீட்டுதலில் உள்ளதா
அல்லது
வானவில்லில் உள்ளதா
என்று
நாம் ஆராய்கையில்
வண்ணம் சொல்கிறது
ஏன் இத்தனை ஆராய்தல்
நாங்கள் எப்போதும் அழகு தான்
நாங்கள் வண்ணங்களாக
இருக்கும் வரை
உங்கள் எண்ணங்களாக அல்ல
வண்ணங்கள் சொல்கின்றன
நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்
நீங்கள்+ மனிதர்கள் இடையே
வந்து
பாகுபாட்டை திணிக்க வேண்டாம்
என்று.....
என்ன ஒரு அற்புதமான பதில்
அல்லவா
சிந்தனையுடன்
உங்கள் கிராமத்து குரல்
Comments
Post a Comment