கம்பன் கையில் பிறந்த தமிழே பாரதியின் எழுத்தில் எழுந்த சுடரே பண்பையும், பகுத்தறிவையும் ஊட்டுகின்ற மொழியே அனைவரின் இரத்த நாளங்களில் ஊறிய தமிழே தனித்து பிறந்த மொழியாம் சிறந்தே விளங்கும் மொழியாம் மூத்த மொழியாம் மூன்று சங்கம் கண்ட மொழியாம் மூவேந்தரை வளர்த்த மொழியாம்... தித்திப்பாய் இருக்கும் மொழியாம் திகட்டாத மொழியாம் கலைகளையும் பண்பாட்டையும் உருவாக்கிய மொழியாம் ஈடு இணையில்லா இறையை கூறும் மொழியாம் தத்துவ மெய்பொருளை உள்ளடக்கிய மொழியாம் அயல்நாட்டவரை அரவணைக்கும் மொழியாம் தன்னகரில்லா தரணி மொழியாம்......வாழ்க வாழவே..... உங்கள், கிராமத்து குரல்
உண்மைகள் ஒரு போதும் சாவதில்லை...... ஊலாவிக்கொண்டே இருக்கிறது.... தக்க சமயம் பார்த்து தர்மம் வெல்லும்..... அகந்தைகள் கொண்ட மனம் அழிவை நோக்கி செல்லும்.... பண்பை கொண்ட மனம் அன்பை நோக்கி செல்லும்....
Comments
Post a Comment